Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் மறியல்

உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரம் உளுந்து மூட்டை ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ரூ.4 ஆயிரம் அளவுக்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வந்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் உளுந்துக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் விற்பனைக்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x