Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் போலீஸார் நேற்று முன்தினம் போலகம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிப்டிக் தொழிற்பேட்டை வளாகத்தில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பவித்(20) என்பவரையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன்(34) என்பவரை நாகப்பட்டினத்தில் போலீஸார் கைது செய்து, 170 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம், ரூ.3,012 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT