Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் இயற்கை மருத்துவம் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யோகா மற்றும் மருத்துவ வாழ்வியல் பிரிவு மருத்துவர் கு.செல்வம் தலைமை வகித்தார். மருத்துவர் சுபிதா முன்னிலை வகித்தார். முகாமை தொடங்கிவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேமாவதி பேசியபோது, ‘‘யோகா பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மனதுக்கான தொடர்பு அதிகரிக்கும். இதயம் பலம் பெறும். சுவாசம் சீராகும். கோபம், பதற்றம் நீங்கி நோயின்றி வாழ வழி பிறக்கும்’’ என்றார். இதில், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கலைவாணி மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்களுக்கு யோகா பயிற்சி, இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. வட்ட சட்டப் பணிகள் குழு பொறுப்பாளர் ஜோதிநாதன் வரவேற்றார். நீதிமன்ற ஊழியர் பாஸ்கர் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT