Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM
தஞ்சாவூர்: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் நெற்பயிர், வாழை, கரும்பு, கத்தரிக்காய், மிளகாய், தக்காளி ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதில், விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT