Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM
நாகர்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்கன்னியாகுமரி மாவட்ட அளவிலான நேரடி மாணவர் சேர்க்கைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான பொறி பகுதி பொருத்துனர் (வாய் பேசாதவர் மற்றும் காதுகேளாதவர்), பற்றவைப்பவர், முடநீக்கியல் தொழில்நுட்ப வல்லுனர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதால், அவற்றை நிரப்பிடும் வகையில் மீண்டும் வரும் 16-ம் தேதி வரை பயிற்சியாளர் சேர்க்கைக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவ, மாணவியர் அலுவலக வேலை நாட்களில் சான்றிதழ்களுடன் நேரில் வந்து காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரைவிண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பில்லை. 14 முதல் 40 வயது வரையுள்ள ஆண்களும் விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT