Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM
மதுரை: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார் தொடர்பான மனுவுக்குப் பதிலளிக்க, தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த தனிஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: வைகுண்டம், பழைய காயல், மஞ்சள் நீர் காயல் பகுதிகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2016 முதல் 2019 வரை 82 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஏற்கெனவே வீடு வைத்திருப்போருக்கும், இறந்தோருக்கும், ஒரு குடும்பத்தில் இருவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடு குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால், விசாரிக்காமல் முடிக்கப்பட்டது. மீண்டும் புகார் அளித்தேன். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி விசாரித்து, மாநில உள்ளாட்சித் துறை இயக்குநர், தூத்துக்குடி ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 5-க்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT