Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM
எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வியாபாரி காளிராஜன்(52). இவர் நேற்றுமுன்தினம் மாலை வியாபாரத்துக்காக ஆட்டோவில் சிந்தலக்கரை சென்றுள்ளார். ஆட்டோவை, இளம்புவனத்தை சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி(35) ஓட்டிச்சென்றுள்ளார். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இ.பி.அலுவலகம் அருகே சென்றபோது, மதுரை சென்ற கார் மோதியதில், காளிராஜன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். எட்டயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT