Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM

காவலருக்கு தங்கப்பதக்கம்

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசன போட்டி காணொலி காட்சி மூலம் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 90 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் கலந்துகொண்டனர். போட்டியில் 35 முதல் 45 வயது பிரிவில், தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை முதல்நிலைக் காவலர் ராஜலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x