Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM

புயலால் பாதித்த 61 படகுகளுக்கு மத்திய குழுவிடம் நிவாரணம் கேட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் பாதிப்பை மத்திய குழு அண்மையில் பார்த்துச் சென்றது. ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும், மீனவர்களையும் குழுவினர் பார்த்தனர். மாவட்டத்தில் புயலாலும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை மற்ற படகுகளை வைத்து இழுக்கும் போதும் 61 படகுகள் சேதமடைந்துள்ளன. ஆகவே இப்படகுகளுக்கு மத்தியக் குழுவிடம் நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x