Published : 03 Jan 2021 03:23 AM
Last Updated : 03 Jan 2021 03:23 AM
காட்பாடி அருகே தெங்கால் கிராமத்தில் புகுந்த யானைக் கூட்டம் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னை அடுத்த தெங்கால் கிராமத்தில் யானைக் கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு இரவு புகுந்தது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டம் கரும்புத் தோட்டத்தில் புகுந் தது. மேலும், கரும்புத் தோட்டத் தில் இருந்து வெளியேறாமல் சேதப்படுத்தியது.
இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் யானைக் கூட்டத்தை விரட்டும் முயற்சி 2 நாட்களாக நடந்தது.பட்டாசு வெடித்து யானைக் கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் வனத்துறையி னர் நேற்று விரட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT