Published : 03 Jan 2021 03:23 AM
Last Updated : 03 Jan 2021 03:23 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 5, 6 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
4-ம் தேதி கடலோர மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 5, 6 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.
ஏனைய தமிழக மாவட்டங் கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT