Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

விபத்தில் பாமக நிர்வாகி உயிரிழப்பு பேருந்துக்கு தீ வைப்பு

ஆவடி அருகே உள்ள அமுதூர்மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (45). பாமக மாவட்ட இளைஞரணி துணை தலைவரான இவர், நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டசாலை அருகே தனியார் பேருந்து ஒன்று, கார்த்திக்கின் மோட்டார்சைக்கிளை மோதியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அமுதூர்மேடு பொதுமக்கள் அந்ததனியார் பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் அப்பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x