Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் காயம்

புதுச்சேரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.

புதுச்சேரி அடுத்த பூமியான் பேட் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகன் பாலாஜி (10). அதே பகுதியைச் சேர்ந்த தாஸ் மகன்கள் சூர்யா (12), காந்த்(11), ராஜா மகன் சுதேசன் (10).4 சிறுவர்களும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள லாம்பர்ட் சரவணன்நகர் குடியிருப்பு சுற்றுச்சுவரின் அருகில் 4 பேரும் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x