Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
புதுச்சேரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
புதுச்சேரி அடுத்த பூமியான் பேட் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகன் பாலாஜி (10). அதே பகுதியைச் சேர்ந்த தாஸ் மகன்கள் சூர்யா (12), காந்த்(11), ராஜா மகன் சுதேசன் (10).4 சிறுவர்களும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள லாம்பர்ட் சரவணன்நகர் குடியிருப்பு சுற்றுச்சுவரின் அருகில் 4 பேரும் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT