Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் ஆர்.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

நாகையில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநி லச் செயலாளர் ஆர்.முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.14-ல் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நடை பெற உள்ள காத்திருப்புப் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல் வர் பழனிசாமி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்படும் என சொல்லவில்லை. எனவே, பாதிக் கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்.கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அரசு அறிவித்தபடி, அனைவருக்கும் வீடுகளை கட்டித்தர வேண்டும். தமிழக அரசு கேட்கும் நிதியை இயற்கை பேரிடர் நிதியிலிருந்து முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை நேற்று ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கனமழையால் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு உடன டியாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மழைநீர் புகுந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் தூர் வாரி, அதிக மழையின்போது தண்ணீர் வடிய நிரந்தரமான நடவடிக்கையை அரசு மேற் கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x