Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

குமரியில் 400 மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிப்பு

நாகர்கோவிலில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் மூடப்பட்டிருந்த மருத்துவமனை.

நாகர்கோவில்

ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கான மத்திய அரசின் உத்தரவை கண்டித்து தனியார் மருத்துவர்கள நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், கருங்கல், களியக்காவிளை, சாமியார்மடம், திங்கள்நகர், குளச்சல், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி உட்படமாவட்டம் முழுவதும் 400-க்கும்மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால் கூறும்போது, ``இந்திய மருத்துவத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் விதமாக, மக்களின் உயிருடன் மத்திய அரசு விளையாட முன்வந்துள்ளது. எனவே, இந்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும். இதற்காக அனுமதிக்கப்பட்ட குழுக்களை கலைக்க வேண்டும். ஆயுஷ்மருத்துவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்படிப்பை ரத்துசெய்யவேண்டும். அடுத்த வாரம்மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அரசின் இதே தன்மை தொடர்ந்தால் எங்கள் போராட்டத்தை மேலும் தொடர்வோம்’’ என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 800-க்கும் மேற்பட்ட தனியார்மருத்துவர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x