Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்திடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடல் பகுதியில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மீனவர் அஜீஸ் பிங்க், கேரளாவை சேர்ந்த மீனவர் ஜெலாஸ்டின் ஆகியோரை இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் எல்லை தாண்டியதாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் இரு மீனவர்களும் இறந்தனர்.இவர்களுக்குரிய நஷ்டயீடை இத்தாலி அரசு வழங்க வேண்டும் என, சர்வதேச நீதிமன்றம் கடந்த 2020 மே 21-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. நஷ்டஈடை தாமதமின்றி இந்திய அரசு பெற்று வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT