Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வ்து வார்டு பகுதியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டிலும், 15-வது வார்டில் ரூ.32லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்ட பேவர் பிளாக்சாலை மற்றும் வடிகாலையும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவற்றை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.34 லட்சம்மதிப்பீட்டில் குமாரபுரத்தில் சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு சாலை வசதி மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உட்பட ரூ.189 லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT