Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி புதுவை முதல்வர் மீண்டும் உறுதி

புதுவையில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாகே பிராந்தியத்தில் தொற்றுகணிசமாக உயர்வால் மருத்து வத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தோர் எண்ணிக்க 615 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 206 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 186 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட் டுள்ளனர். மொத்தமாக 392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “மாகேவில் தொற்று கணிசமாக உயர்வதால் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. விரைவில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசியை புதுச்சேரிக்கு அனுப்பி வைப்பதுடன், அதற்கான நிதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். 16 லட்சம் மக்கள் தொகையுள்ள புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே எங்கள் கொள்கையாகும். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x