Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM
தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றாத புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக சார்பில் 72 மணிநேர தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநில பாஜக தலைவர் சாமிநாதன் (நியமன எம்எல்ஏ) தலைமையில் அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்தில் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை புதுவையில் உள்ள ஒவ்வொரு தொகுதியையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று இப்போராட்டம் நிறைவு பெற்றது.
புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா போராட்டத்தை முடித்து வைத்து பேசியதாவது:
ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரச்சாரத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் பாஜக வெற்றி நிச்சயமாகிறது. சமீபத்தில் பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அதை நிரூபித்துள்ளது. காங்கிரஸ் அரசை பொருத்தவரை வாய் மட்டுமே வேலை செய்யும். புதுவையில் உள்ள நாராயணசாமி தலைமையிலான அரசும் இதற்கு உதாரணம். 5 ஆண்டுகளாக உறக்கத்தில் தான் உள்ளனர்.
மத்திய அரசின் திட்டங்களை புதுவையில் நிறைவேற்றாமல் இருப்பதுதான் காங்கிரஸ் அரசின் வேலை. என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT