Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஊசுட்டேரி நிரம்பியது

புதுச்சேரியில் வீசிய ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி 5 ஆண்டுகளுக்குப் பிறகுமுழுமையாக நிரம்பியுள்ளது. ஏரி நிரம்பியதால் ஏரிக்குவரும் உபரி நீர் வெளியேற் றப்படுகிறது. அழகிய சுற்றுச் சூழலுடன் கூடிய இந்த ஏரியின் நீர், நகர நீர் தேவையையும் பூர்த்திசெய்கிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஊசுட்டேரி நிரம்பி இருப்பதை அறிந்த ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் தலைமையில் அப்பகுதி மக்கள் ஏரிக்குச் சென்று, ஏரி நீரில் மலர் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x