Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

இளையான்குடி அருகே வைகை ஆற்று கால்வாயை தூர்வாராததால் விவசாய பணி பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி அருகே வைகை ஆற்று கால்வாய் பல ஆண்டுகளாக தூர் வாராததால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளது.

மானாமதுரை அருகே வைகை ஆற்றில் உள்ள பார்த்திப னூர் மதகு அணையில் இருந்து சாலைக்கிராமம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் சாலைக்கிராமம் கால்வாய் அமைக் கப்பட்டுள்ளது. சாலைக்கிராமம் கண்மாய் நிரம்பியதும், அங்கி ருந்து செங்கோட்டை, தெ.புதுக் கோட்டை, பிராமணக்குறிச்சி, முள்ளியரேந்தல், முனைவென்றி, திருவுடையார்புரம், சிறுபாலை, புலியூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்குத் தண்ணீர் செல்கிறது. சாலைக்கி ராமம் கால்வாயை பல ஆண்டு களாக தூர்வாரவில்லை. இதனால் முட்புதர்கள், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் பலத்த மழை பெய்தால் கூட தண்ணீர் செல்லாததால் அக்கால் வாய்க்குட்பட்ட கண்மாய்கள் நிரம்புவதில்லை. அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சாலைக்கிராமம் விவசாயி சுந்தரராஜன் கூறிய தாவது: கால்வாயின் பல இடங்களில் மணல் திருடப் பட்டுள்ளது. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப் பட் டுள்ளது. ஆனால் கால்வாய் தூர் வாராததால் எங்கள் பகுதிக்கு தண் ணீர் வரவில்லை என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x