Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி தெற்கு ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலா(47). தொடர் மழை காரணமாக, பன்னீர்செல்வம் வீட்டின் அருகிலுள்ள ரவிச்சந்தி ரன் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து, பன்னீர்செல்வம் வீட்டின் மீது விழுந்தது. இதில், பன்னீர்செல்வத்தின் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மாலா உடல் நசுங்கி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அருகில் வசிப்பவர்கள் மீட்டு, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT