Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

காரைக்காலில் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின் துறை ஊழியர்கள் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x