Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

கடலோரப் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோந்து

நிவர் புயல் உருவான போது மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, அரக்கோணத்திலிருந்து காரைக்கால் வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்பு செயல் விளக்க நிகழ்வுகளை நடத்துவது, கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் ‘புரெவி’ புயல் உருவாகியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கடலோரப் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோந்து மேற்கொண்டு ஆய்வு செய்தனர். தாழ்வான பகுதிகள், மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x