Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM
நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சித்திக், நாகூர் ஆண்டவர் தர்கா இடைக்கால நிர்வாக குழுவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வெளியூர்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால், சாலைகளிலும், கடைகள் முன்பும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, நாகூர் தர்கா தோட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT