Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட்சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்பேரணி நடந்தது. லட்சுமி மில் மேம்பாலம் அருகேபேரணியை டிஎஸ்பி கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். பேரணியில் சிலம்பாட்டம், கத்திச் சண்டைபயின்ற மாணவர்களும், ஸ்கேட்டிங் மாணவர்களும் பங்கேற்றனர். வடக்கு மாவட்ட அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் எஸ்.சுதா என்ற சுப்புலட்சுமி, வடக்கு மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர் காந்த், சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், டிரஸ்ட்தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x