Published : 03 Dec 2020 03:16 AM
Last Updated : 03 Dec 2020 03:16 AM

பிச்சை எடுக்கும் தகராறில் முதியவர் கொலை

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே 70 வயதுமுதியவர் ஒருவரும், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்(65) என்பவரும் பிச்சை எடுத்து வந்தனர்.

அங்குள்ள கடையில் அவர்கள் பிச்சை எடுத்த போது, பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்ஆத்திரமடைந்த பிரகாஷ், அவருடன் பிச்சை எடுத்த முதியவரை கம்பால் தாக்கியுள்ளார். இதில்முதியவர் இறந்து போனார். முதியவரை பிரகாஷ் ஆவேசமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரகாஷை வடசேரி போலீஸார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டதை பலர் வீடியோ பதிவு செய்த நிலையில், அவரை காப்பாற்ற யாரும் முன்வராதது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x