Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி பிரையண்ட்நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன், கார் ஓட்டுநர். இவருடைய மனைவி உஷா(33). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த மின்சார மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக உஷா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
ராமேஸ்வரம் சுனாமி காலனியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சதீஷ்கண்ணன்(35). இவர் தனது நண்பர் மடத்தூர் துரைக்கனி நகரைச் சேர்ந்த சரவணமுத்து மகன் மாரிசெல்வம்(22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மடத்தூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்கண்ணன் இறந்தார். லேசான காயமடைந்த மாரிச்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தூத்துக்குடி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT