Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

2 மதுபான கடைகள் மூடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை நகரம் காமராஜர் சிலை அருகே மற்றும் போளூர் சாலையில் இயங்கி வரும் 9481 மற்றும் 9269 என்ற எண்ணுள்ள டாஸ்மாக் மதுபானக் கடை களை நேற்று முதல் வரும் 29-ம் தேதி வரை மூட வேண்டும்.

மேலும், நகரில் இயங்கி வரும் மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்எல்3 மற்றும் எப்எல்4 ஏ உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனை வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மூடி வைக்க வேண்டும் என ஆட்சியர் சந்திப் நந்தூரி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x