Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

வேலூர்: திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்டதாக 3 திமுக எம்எல்ஏக்கள், வேலூர் எம்பி உட்பட 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை திருக்குவளையில் தொடங்கிய நிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த தகவலை அடுத்து, உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் திமுக எம்எல்ஏ வில்வநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். நாட்றாம்பள்ளியில் முன்னாள் எம்எல்ஏ சூரியகுமார் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூரில் எம்எல்ஏ நல்லதம்பி, வேலூரில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், எம்எல்ஏ கார்த்திகேயன் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 3 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x