Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பொதுக் கழிப்பறை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பொதுக் கழிப்பறை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி காந்தி மைதானத்தில் உள்ள பொது கழிவறைக்கு நேற்று காலை வந்தவர்களுக்கு சந்தனம், குங்குமம், இனிப்பு கொடுத்து வரவேற்றார். சார்பு-ஆய்வாளர் பரமேஸ்வரன், பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக் கழிப்பிடத்தின் அவசியம், சுகாதாரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நத்தம்: நத்தம் காக்காபட்டியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் கழிவறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கழிவறைக்கு வந்தவர்களை பேரூராட்சிப் பணியாளர்கள் வரவேற்றனர். துப்புரவு ஆய்வாளர் சடகோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x