Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவில் இருந்து மீண்ட 78 போலீஸாருக்கு எஸ்.பி. பத்ரி நாராயணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ள போலீஸாருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. கரோனாவில் இருந்து மீண்ட 78 போலீஸாருக்கு எஸ்.பி. பத்ரிநாராயணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது, கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பணியின்போது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT