Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

தலைமைக் காவலர் தற்கொலை முயற்சி :

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ்(50). இவர் பெரம்பலூர் கவுள்பாளையத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி மாலதி உடல்நலக்குறைவால் உயிரிழந் தார். அதனால் செல்வராஜ் மனமுடைந்து காணப்பட்டார். இவருக்கு 21 வயதில் பட்டப் படிப்பு முடித்த மகளும், 11-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில மாதங்களாக பணிக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் மகனுக்கும், செல்வராஜூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மகன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து செல்வராஜ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

அவரை அவரது மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x