Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM
சேலம்: சேலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் தரைமட்டமான வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.
சேலம் கருங்கல்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 23-ம் தேதி எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், 4 வீடுகள் தரைமட்டமானது. 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
வீடுகள் இடிந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் இடிபாடுகளில் சிக்கியது. இதை கடந்த ஒரு வாரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதையடுத்து, மீட்கப்பட்ட பொருட்களை நேற்று தீயணைப்பு துறையினர் வட்டாட்சியர் முத்துலட்சுமி, வருவாய் ஆய்வாளர் நந்தினி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, இளங்கேஸ்வரன், பாலம்பாள் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT