Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க : புதிய தமிழகம் கட்சி தலைவர் வலியுறுத்தல் :

கோவை: தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கோவை - திண்டுக்கல், கோவை - திருச்சி, கோவை - சேலம் சாலைகளை 8 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும். தமிழக அரசு சார்பில் நடப்பாண்டு பொங்கல் பரிசாக 20 பொருட்கள் கொண்ட தொகுப்பு நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம், பிற குடும்பத்தினருக்கு தலா ரூ.2,500 வழங்க வேண்டும். புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா நிகழ்வு வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஓராண்டுக்கு கொண்டாடப்படவுள்ளது. இதன் தொடக்கமாக தென்காசியில் டிசம்பர் 15-ம் தேதி இந்துக்கள் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் தனது சொந்த பலத்தில் தனித்து போட்டியிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x