Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

தருமபுரியில் இன்று நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு :

தருமபுரி: தருமபுரியில் இன்று (26-ம் தேதி) நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (27-ம் தேதி) நடக்க உள்ளது.

தருமபுரி மாவட்ட விவசாயிகளுக் கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று (26-ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் நடக்க இருந்தது.

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களால் இந்தக் கூட்டம் நாளை (27-ம் தேதி) காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் நடக்க உள்ளது.

மாவட்ட விவசாயிகள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்தக் கூட்டத்தில் பங்கேற்று வேளாண்மை தொடர்பான தங்களின் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை தெரிவித்து தீர்வு தேடிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x