Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM
சேலம்: சேலத்தில் அனுமதியின்றி இயங்கிய 5 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
சேலத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றியும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும் சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் ஆய்வு நடத்தினர். இதில், சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதம்பட்டி பகுதிகளில் இயங்கி வந்த 5 சாயப்பட்டறைகள் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து, 5 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகளை மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். மேலும், சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT