Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கை : சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் :

திருச்சி: ஆடு திருடர்களால் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவனர்- தலைவர் பொன்.முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வகுமார் மற்றும் தேவேந்திர குல வேளாளர் நலச் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x