Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை :

அரியலூர்: அரியலூரை அடுத்த ஒட்டக்கோவில் காலனித் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(24). இவர், 2018-ம் ஆண்டு 16 வயதுடைய பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். இதில், மாணவி கர்ப்பமடைந்தார். இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் தட்சிணாமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த தட்சிணாமூர்த்தியின் சகோதரி செல்வி, அவரது கணவர் பெரியசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தட்சிணாமூர்த்திக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்தார். மேலும், மாணவிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் செல்வி, பெரியசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x