Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

கரூர் கரூர் மாவட்டம் பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் இன்று (நவ

கரூர்

கரூர் மாவட்டம் பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் இன்று (நவ. 24) கூடுதல் மின்மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அரவக்குறிச்சி, கருங்கல்பட்டி, செல்லிவலசு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கரூர் மாவட்டம் தாளப்பட்டி, நொய்யல், காணியாளம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ. 25) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், தாளப்பட்டி, நொய்யல் துணை மின்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், காணியாளம்பட்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x