Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

பொள்ளாச்சியில் குதிரை வண்டி பந்தயம் :

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஜோதிநகரில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 100-க்கும் அதிகமான குதிரை வண்டிகள் பங்கேற்றன.

பொதுமக்களிடையே குதிரை வளர்ப்பு, குதிரை இனங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நேற்று பொள்ளாச்சியை அடுத்த ஜோதிநகரில் குதிரை வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில பகுதிகளில் இருந்து 100-க்கும் அதிகமான குதிரை வண்டிகள் பங்கேற்றன.

போட்டியில் பங்கேற்ற குதிரைகளின் உயரத்தை கணக்கிட்டு 3 பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. பந்தயத் தொலைவு 400 மீட்டர் ஆகும். இதை குறைந்த நேரத்தில் கடக்கும் குதிரை வண்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல குதிரை ரைடிங் பந்தயமும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x