Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் - சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் :

ராஜபாளையத்தில் ஒரே பிரசவத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் யோகேஷ். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி யாழினி. சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.யாழினி கர்ப்பமானபோது 3 கரு உருவாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதிய மருத்துவர்கள், கருவைக் கலைக்குமாறு அறிவுறுத்தினர். இதை ஏற்க மறுத்த தம்பதி, 2017-ல் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 4 ஆண் குழந்தைகள் பிறந்ததை அறிந்தனர். அதையடுத்து ராஜபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய யாழினி, குறிப்பிட்ட தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு நேற்று முன்தினம் அறுவைச் சிகிச்சை மூலம் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x