Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி உத்தம பாளையம் திரிக்குணகிரி மலையை மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஆண்டிபட்டி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சே.கிருஷ்ணம்மாள் தலைமை வகித்தார். வரலாற்று ஆய்வு மையச் செயலாளர் பஞ்சுராஜா முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் பள்ளி, கம்பம் நாலந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திரிக்குணகிரி மலையில் கிபி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்களின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வட்டெழுத்துகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT