Published : 21 Nov 2021 03:08 AM
Last Updated : 21 Nov 2021 03:08 AM

போலீஸ் பயிற்சியில் முதலிடம் நாமக்கல் எஸ்ஐ-க்கு பாராட்டு :

நாமக்கல்: திருச்சியில் நடைபெற்ற பயிற்சியில் முதலிடம் பிடித்த காவல் உதவி ஆய்வாளருக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் பாராட்டு தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நிலையில் இருந்து காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வு பெறுவதற்கான 9 வார கால அடிப்படை பயிற்சி திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருச்சி மாநகரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 131 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

9 வாரங்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கவாத்து, துப்பாக்கிச் சுடுதல், சட்டம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிகள் அனைத்திலும் நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் வேலுமணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அவரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x