Published : 21 Nov 2021 03:08 AM
Last Updated : 21 Nov 2021 03:08 AM
திருச்சி: கோவையில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, பாஜக திருச்சி மாவட்ட மகளிரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரணி தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில மகளிரணிச் செயலாளர் லீமா சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் உமா, பொதுச் செயலாளர் துர்கா தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், கோட்ட அமைப்புச் செயலாளர் பாலன், இளைஞரணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் கவுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT