Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள மறவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஸ்(25). இவர், பிளஸ் 1 மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவியின் தந்தையையும் மிரட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக, மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஹரிஸை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மலைக்கண்ணு மகன் சிவசிதம்பரம்(30). இவர், திருச்சியைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடந்த ஜனவரி மாதம் கட்டாய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அறையில் அடைத்து வைத்து சிறுமிக்கு சிவசிதம்பரம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவசிதம்பரம், இவரது தாயார் சந்திரா(47) ஆகியோரை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று கைது செய்தனர். மேலும், தந்தை மலைக்கண்ணுவை(52) தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT