Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM

வேலூரில் புதுமணப்பெண் தற்கொலை :

வேலூர்: வேலூர் முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (21). நர்சிங் மாணவி. இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவருக்கும் கடந்த 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முத்து மண்டபம் பகுதியில் உள்ள புவனேஸ்வரி வீட்டில் தம்பதி கடந்த 2 நாட்கள் தங்கியிருந்தனர். நேற்று காலை கழிவறையில் தூக்கில் தொங்கியபடி புவனேஸ்வரி உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வரிக்கு திருமணமாகி 2 நாட்களே ஆன நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x