Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

மதுரையில் 12 மையங்களில் யூபிஎஸ்சி எழுத்து தேர்வு: 1,812 பேர் பங்கேற்பு :

மதுரை: மதுரையில் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினருக்காக மத்திய தேர்வாணையம் நடத்தும் எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. மதுரை சவுராஷ்டிரா கல்லூரி, நாய்ஸ் பள்ளி, பல்கலைக்கழக கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, ஜெய்ஹிந்த்புரம் டிவிஎஸ் பள்ளி, யாதவா கல்லூரி உள்ளிட்ட 12 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. 4510 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், 1812 பேர் பங்கேற்றனர். நாய்ஸ் பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் ஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x