Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (45) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியாறு ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது, கால் தவறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர் மழை காரணமாக ஆழியாறு ஆற்றில் வெள்ளம் அதிகளவில் செல்வதால், ஆற்றுக்குள் விழுந்த கந்தசாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் ஆனைமலை போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கந்தசாமியை தேடி வந்தனர். 2-வது நாளாக நேற்றும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT