Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM
கரூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர், தீபாவளி விடுமுறைக்காக தனது உறவினரான கரூரை அடுத்த காளியப்பனூர் ராசி நகரைச் சேர்ந்த ரகுநாதன் என்பவரின் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். இவரது ஒன்றரை வயது மகன் தர்ஷித் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென கதவு உள்பக்கமாக தாழிடப்பட்ட தனியறைக்குள் சிக்கிக்கொண்டான்.
இதையடுத்து, சிறுவனை மீட்க முடியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் உடனே அங்கு சென்று, ஜன்னல் வழியாக குச்சியை நீட்டி, ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு கதவில் உள்ள தாழ்ப்பாளை நீக்கி, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT